Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

0 comments
இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது  ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும். 
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். 
  • இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
  • முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
  • இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
  • இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution)  இந்த வரியை கொடுக்கவும். 
  • அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

(OR)

  • உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
  • நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற

2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்

0 comments
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்.

(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம் மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.

0 comments

அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா போன்ற 41 நாடுகளுக்கு
இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx
41 நாடுகளுக்கு மட்டும் தான் நாம் இலவசமாக இந்ததளம்
மூலம் பேக்ஸ் அனுப்ப முடியும். இந்தியாவிற்கு பேக்ஸ்
இலவசமாக அனுப்பும் வசதி இந்த தளத்தில் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா,கொரியா,இத்தாலி,பிரான்ஸ்,
இஸ்ரேல் போன்ற மற்ற அனைத்து (41) நாடுகளுக்கும் நாம்
இந்த இணையதளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு பேக்ஸ் செய்தி மட்டுமே அனுப்ப
முடியும். 178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான
கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம்
பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
வெளிநாட்டு வேலைக்கு பேக்ஸ் அனுப்பும் நம் தமிழ்
நண்பர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி

0 comments

ஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.

                               முதலில் உங்கள் ஜிமெயில் கணக்குக்குள் நுழையவும்


                                                   




 ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another   address கிளிக் செய்யவும்.



 இங்கு எந்த ஈமெயிலை Link seiya வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்


.




                                          
                                              Send verification கிளிக் செய்யுங்கள்
                                      

அடுத்து     VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில்       கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification   ஈமெயில் வரும்.
அங்கு சென்று Confirmation code number யை  verification box யில் தந்து விடுங்கள்.




வேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose  பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown  வந்திருக்கும் அதில் நீங்கள்  கேட்ட  ஈமெயில்  கணக்கு    வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள்  நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.

அதிகம்  பயன்படுத்தாத   சில   கணக்கை   லிங்க்   செய்து  கொள்ளுங்கள்.சில சமயம்  அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்
கணக்கிலிருந்தே  நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.

முப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .

0 comments
             3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் .

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் IE ,Firefox போன்ற Browser கள் 2D வடிவில் வழி பக்கங்களை காட்டுகின்றன. 3D browser கள் மூலம்  நமது வலைபக்கங்களை பார்க்கும் போது ஓரளவுக்கு மட்டுமே முப்பரிமான உணர்வு கிடைக்கும் , On line Shopping , Gaming போன்ற தளங்களில் இதன் பயன்பாடு அதிகம்.youtube போன்ற தளங்களில் வித்தியாசம் தெரியும் .இந்த பதிவை 3D browser இல் தான் பதிவிடுகிறேன் ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை  .

பல நிறுவனங்கள் இந்த 3D Browser வசதியை வழங்கினாலும் அவை பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை . Browse3D என்ற இணையதளம் SpaceTime3D என்ற இலவச Browser இலவசமாக வழங்குகிறது .

முப்பரிமான வசதியுடன் இதில் பல கூடுதல்  அம்சங்கள் உள்ளன   Navigation Button - இதன் வலைபக்கத்தை மேலும் கீழும் இடம் வலம் மாற்ற இயலும் , ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஒரே Tab ல் செல்லமுடியும் .

Screenshot Button- பக்கத்தை Screenshot செய்ய முடியும் .

இன்னும் print ,print preview வசதிகளும் உள்ளன .Screenshot எடுக்கப்பட்ட .இந்த படத்தை பாருங்கள்

இதில் open New Window, New Tab option கள் இல்லை , ஏனென்றால் ஒரே பக்கத்தில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பக்கங்களை ஒரே Tab ல் பார்க்கலாம், தேவையானதை தேர்ந்தெடுக்கலாம் .

இது சிறப்பான ஒரு3D Browser என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கென  அதிக நேரமும் எடுத்துக்கொள்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு
உபயோகித்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்
இதனை Download செய்ய Click Here

உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க...

0 comments

கம்ப்யூட்டர் நம் வாழ்வின் இணையாக, தோழனாக, இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. நம் உடல் நலனைப் பாதுகாப்பது போல இதனையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.


அதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.


01. ஆண்ட்டி வைரஸ்:
கம்ப்யூட்டர் இயங்கும் போது எப்போதும் வைரஸ் தடுப்பு தொகுப்பு ஒன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் இந்த தடுப்பு தொகுப்புகளைப் பெறலாம். இவற்றை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்தல் மிக முக்கியமானது. அப்போதுதான், அன்றாடம் உருவாகும் வைரஸ்கள் மற்றும் கெடுக்கும், தகவல் திருடும் தொகுப்புகளிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இலவச தடுப்பு திட்டங்கள் பல கிடைத்தாலும்,

கீழ்க்கண்டவை நிலையான நல்ல பயன்பாட்டைத் தருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ்(AVG Antivirus): http://www.avg.com/inen/liteproductavgantivirusfree

2. அவிரா பெர்சனல் பிரீ ஆண்ட்டி வைரஸ் (Avira Personal Anti Virus) http://www.freeav.com/en/download/1/download_avira_antivir_personal_free_antivirus.html.)

3.அவாஸ்ட் ஹோம் எடிஷன் பிரி ஆண்ட்டி வைரஸ் (Avast Home Edition Free Antivirus):http://www.avast. com/eng/avast_4_home.html)


02. பயர்வால்:
ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன், திருட்டுத்தனமாக நம் கம்ப்யூட்டர்களுக்குள் நுழைய வரும் புரோகிராம்களைத் தடுக்கும் பயர்வால் அமைப்பினை, நம் கம்ப்யூட்டர்களில் அமைக்க வேண்டும்.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைப் போலவே, இணையத்தில் இலவச பயர்வால் தொகுப்புகளும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

1.ஸோன் அலார்ம் பிரீ பயர்வால் (Zone Alarm Free Firewall):http://www.zonealarm.com.

2.பிசி டூல்ஸ் பயர்வால் ப்ளஸ் (PC Tools Firewall Plus)http://www.pctools.com/firewall/

3.கொமொடோ இன்டர்நெட் செக்யூரிட்டி(Comodo Internet Security)http://personalfirewall. comdo.com/


03. நாள் பட்ட பைல் நீக்கம்:
பாதுகாப்பு தொகுப்புகளை நிறுவிய பின், நாம் எப்படி நம் கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கிறோம் என்பதனை எண்ணிப் பார்த்து, அவற்றை நீக்குதல் நலம் தரும்.

வெகுநாட்களாகப் பயன்படுத்தாத கோப்புகள், ஒரே பெயரில், பல ட்ரைவ்களில் சேமிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் சில ஆவணக் கோப்புகள், திருத்தி அமைத்த பின்னும், அதன் பழைய ஆவணக் கோப்புகள், இணையத்தில் செல்கையில் இறக்கப்படும் தற்காலிகக் கோப்புகள் எனப் பல கோப்புகளை நாம் ஹார்ட் டிஸ்க்கில் வைத்து, கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை மட்டுப் படுத்துகிறோம்.

இதே போல் அழிக்கப்படும் பைல்கள் எப்போதும் ரீசைக்கிள் பின் நிறைந்து வழியும் வகையில் நிரப்புகிறோம். ஒரே சாப்ட்வேர் அப்ளிகேஷன் சார்ந்த பழைய பதிப்புகளின் மூலக் கோப்புகளைத் தேவையில்லாமல் வைத்திருக்கிறோம்.

வாரம் அல்லது மாதம் ஒருமுறை இவற்றை நீக்கினால், கம்ப்யூட்டர் நலமாக, அதிகப் பயன்தரும் வகையில் இயங்கும்.


04. ரெஜிஸ்ட்ரி சுத்தம் செய்திடுக:
தேவைப்படாத சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை நீக்கினாலும், இவை ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்திய பல நூறு வரிகள், அப்படியே தங்கி, நம் இயக்க வேகத்தினைக் குறைக்கும். நாமாக இவற்றை நீக்க முயன்றால், ரெஜிஸ்ட்ரிக்குப் பாதிப்பு ஏற்பட்டு, இயக்க வேகம் குறையும். இவற்றை நீக்க இணையத்தில் இலவச ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் கிடைக்கின்றன.

இவற்றில் சில கிடைக்கும் முகவரிகளை இங்கு காணலாம்.

1.ரெஜிஸ்ட்ரி மெக்கானிக் (Registry mechanic): http://www.pctools. com./registrymechanic)

2.ரெஜிஸ் ட்ரி ஈஸி (Registry Easy):http: //www.regeasy cleaner.com

3.ரெஜிஸ்ட்ரி பிக்ஸ் (Registry Fix):http ://www.registryfix. com


05. ஸ்பைவேர் தொகுப்பு இயக்குதல்:
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மற்றும் பயர்வால் தொகுப்புகளைப் போல, நம் கம்ப்யூட்டரில் நாம் அறியாமல் வந்திறங்கும், நம் பெர்சனல் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் தொகுப்புகளையும் நாம் பதிந்து இயக்க வேண்டும்.

ஸ்பைவேர், மால்வேர், அட்வேர் எனப் பல பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இந்த வகை புரோகிராம்களும் கம்ப்யூட்டர் இயக்கத்தினை மட்டுப்படுத்தும். தகவல்களைத் திருடும் பட்சத்தில், பெரிய அளவில் இழப்பையும் ஏற்படுத்தும்.

இலவச ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கும் தள முகவரிகள் கீழே தரப்படுகின்றன.

1. அட் அவேர் பிரீ (AdAware Free):http://www.lavasoft. com/ products/ad_ aware_free.php

2.ஸ்பைஸ்பாட் சர்ச் அண்ட் டெஸ்ட்ராய் (Spyspot Search & Destroy): http://www.safernetworking.org/en/ spybotsd/index.html

3. விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) http://www. microsoft. com/windows /products /winfamily/ defender/ default.mspx மேலே கூறப்பட்டுள்ள பலவகை இலவச புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன், அவை குறித்து அந்த தளங்கள் தரும் குறிப்புகளைப் படிக்கவும். உங்கள் தேவைகளுக்கு எந்த புரோகிராம் உதவுமோ, உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரின் வடிவமைப்பிற்கு எது உகந்ததாக இருக்குமோ, அதனை டவுண்லோட் செய்திடவும்.


06. அற்றைப்படுத்துதல்(Updating):
கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அன்றைய புதுப்பிக்கப்பட்ட வழிகளைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும். பொதுவாக இத்தகைய புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டர் இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், தாமாகவே அவற்றின் தாய் தளம் சென்று, அற்றைப் படுத்தலுக்கான கோப்புகள் இருந்தால், சில உங்களுக்கு தகவல் தந்து, அனுமதி கேட்டு அப்டேட் செய்திடும். சில புரோகிராம்கள் தாங்களாகவே அப்டேட் செய்திடும். இதில் எது உங்களுக்குச் சரி எனத் தோன்றுகிறதோ, அதன்படி அவற்றை அமைத்து இயக்கலாம்.


07.ராம் நினைவகத் திறன் கூட்டல்:
கம்ப்யூட்டர் இயக்கத்தில் மையமாக இயங்குவது ராம் மெமரி (RAM Memory) எனப்படும் நினைவகமாகும். இங்கு தான் நம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், நாம் தயாரிக்கும் பைல்கள் தங்கி இயங்குகின்றன.

நாம் கம்ப்யூட்டர் வாங்கும் போது போதுமானதாகத் தோன்றும் இவை, நாளுக்கு நாள் வரும் புதிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும். இதனால் கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் குறையும். எனவே, இந்த மெமரியின் கொள்ளளவினை அதிகப்படுத்த வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரில் என்ன வகை ராம் உள்ளது என்று கண்டறிந்து, எப்படிப்பட்ட ராம் மெமரி சிப்பை வாங்கினால், கம்ப்யூட்டரின் மதர்போர்டில் இணைக்க முடியும் என்று அறிந்து, அதனை வாங்கி இணைக்கவும்.


08. கோப்புகள் பாதுகாப்பு:
கம்ப்யூட்டர்கள் எந்த நேரத்திலும் செயல் இழந்து முடங்கிப் போகும் என்பதால், நாம் அவற்றில் உருவாக்கும் முக்கிய கோப்புகளுக்கு, உபரி நகல் ஒன்று உருவாக்கி, அவற்றைப் பாதுகாப்பாக பதிந்து வைக்க வேண்டும். சிடி, டிவிடி, பிளாஷ் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு ட்ரைவ் எனப் பலவகைகளில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.


09. தூய்மைப்படுத்தல்:
இப்போதெல்லாம், மூடிய குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே கம்ப்யூட்டர் இயக்கப்படுவதில்லை. சாலை ஓரங்களில் இயங்கும் பலசரக்கு கடைகளில் பாருங்கள். கிலோ கணக்கில் பறக்கும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயக்கப்படுகின்றன.

வீடுகளிலும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயங்குகின்றன. எனவே எந்த அளவிற்கு தூசு அதிகமோ, அவ்வளவு குறைந்த நாட்கள் இடைவெளியில், கம்ப்யூட்டரைத் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டு, சிபியு, மதர்போர்டு உள்ள டவர், மவுஸ், ஸ்கேனர், பிரிண்டர் என அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும்.


10. தொடர் மின் வழங்கல்:
மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால், கம்ப்யூட்டர்களின் இயக்கம் திடீரென நின்று போகும். இது கெடுதலை விளைவிக்கும். எனவே நல்ல யு.பி.எஸ். ஒன்றுடன் இணைத்து மட்டுமே கம்ப்யூட்டரை இயக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்களின் இயக்கத்தை எப்போதும் முறைப்படி நிறுத்த வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக, அதற்கு மின் இணைப்பு தரும் சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது.

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் ( உத்தியோகபூர்வமானது)

0 comments

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

Download Skype 5.0 here

 
 
Related Posts with Thumbnails